Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Template by:
Free Blog Templates