Showing posts with label பலஸ்தீனக்கவிதைகள். Show all posts
Showing posts with label பலஸ்தீனக்கவிதைகள். Show all posts

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Showing posts with label பலஸ்தீனக்கவிதைகள். Show all posts
Showing posts with label பலஸ்தீனக்கவிதைகள். Show all posts

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007