Saturday, July 30, 2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

2 comments:

Anonymous said...

Love this poem

Anonymous said...

வதைக்கப்பட்டதால் கொஞ்சமாய் நஞ்சான உன் வார்த்தை
இனிக்கத்தான் செய்தது ஒரு நாளில் மன்மதக் குத்தீட்டியாய்...
கண்ணீருக்குக் கம்பளை என்ன உறவு? பொம்பளை என்ன உறவு?
காட்டுத் தீக்குத் தண்ணீர் பகை
காதல் தீக்குக் கண்ணீர் துணை
துயரத்தில் அழுதால் கண்ணீர் துருவத்தில் அழுதால் பனித்துளியா?
நெஞ்சமது நேசித்த நேசிய நேசம் வஞ்சித்தது உனக்கெனப் பூத்த
ஒற்றை மரப் புஷ்பத்தை
கற்பழிக்கப்பட்ட மலர் கருவாய்ச் சுமந்த வித்து
கன்னிக்கழிந்து வனாந்தரமாகட்டும் உன் கடுச்சொல் வார்த்தையால்
roohulrazmi@yahoo.com

Saturday, July 30, 2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

2 comments:

Anonymous said...

Love this poem

Anonymous said...

வதைக்கப்பட்டதால் கொஞ்சமாய் நஞ்சான உன் வார்த்தை
இனிக்கத்தான் செய்தது ஒரு நாளில் மன்மதக் குத்தீட்டியாய்...
கண்ணீருக்குக் கம்பளை என்ன உறவு? பொம்பளை என்ன உறவு?
காட்டுத் தீக்குத் தண்ணீர் பகை
காதல் தீக்குக் கண்ணீர் துணை
துயரத்தில் அழுதால் கண்ணீர் துருவத்தில் அழுதால் பனித்துளியா?
நெஞ்சமது நேசித்த நேசிய நேசம் வஞ்சித்தது உனக்கெனப் பூத்த
ஒற்றை மரப் புஷ்பத்தை
கற்பழிக்கப்பட்ட மலர் கருவாய்ச் சுமந்த வித்து
கன்னிக்கழிந்து வனாந்தரமாகட்டும் உன் கடுச்சொல் வார்த்தையால்
roohulrazmi@yahoo.com