Showing posts with label கவி"தை. Show all posts
Showing posts with label கவி"தை. Show all posts

Thursday, June 16, 2011

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்



இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

15.06.2011

Saturday, June 4, 2011

கார்க்கால ஞாபகங்கள்





மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்


எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…


இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.


வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான  இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Sunday, June 29, 2008

முதிர்ந்த இலைகள்!!



நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!



என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!



தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!



தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!



ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!



இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....



ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!



ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!



ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!



திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!



பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!



வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!


நில்!!


அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

Tuesday, June 10, 2008

எல்லாம் முடிந்தது???



"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...


கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...


மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..


என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...

ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....

உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....

எப்படி
அழிக்கப்போகிறாய்?

Monday, June 9, 2008

உயிரிலிடறும்.........

நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Showing posts with label கவி"தை. Show all posts
Showing posts with label கவி"தை. Show all posts

Thursday, June 16, 2011

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்



இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

15.06.2011

Saturday, June 4, 2011

கார்க்கால ஞாபகங்கள்





மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்


எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…


இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.


வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான  இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Sunday, June 29, 2008

முதிர்ந்த இலைகள்!!



நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!



என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!



தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!



தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!



ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!



இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....



ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!



ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!



ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!



திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!



பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!



வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!


நில்!!


அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

Tuesday, June 10, 2008

எல்லாம் முடிந்தது???



"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...


கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...


மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..


என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...

ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....

உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....

எப்படி
அழிக்கப்போகிறாய்?

Monday, June 9, 2008

உயிரிலிடறும்.........

நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali