Thursday, June 16, 2011
வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்
Posted by Unknown at Thursday, June 16, 2011Labels: கவி"தை
Saturday, June 4, 2011
கார்க்கால ஞாபகங்கள்
Posted by Unknown at Saturday, June 04, 2011Labels: கவி"தை
Monday, June 29, 2009
தோற்றுப்போகிறேன்.....
Posted by Anonymous at Monday, June 29, 2009வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…
முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.
தோற்றுப்போகிறேன்…
ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…
அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…
விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….
உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Monday, June 15, 2009
தூங்காத நினைவுகள்!!!
Posted by Anonymous at Monday, June 15, 2009என்ன
`நான்`
என் நேற்றுக்கள்….
Labels: கவி"தை
Sunday, May 24, 2009
புத்தரின் விழிகள்
Posted by Anonymous at Sunday, May 24, 2009எரியுங்கள்!!!
நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!
அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!
துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!
புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!
நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!
கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?
அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?
புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!
Labels: கவி"தை, போர்க்காலக்கவிதைகள்
Thursday, February 12, 2009
ஓரங்குலமும் அசையேன்
Posted by Anonymous at Thursday, February 12, 2009
என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!
என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!
என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!
துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!
அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….
என்னை
சின்னாபின்னப்படுத்து….
என் குடும்பத்தை
இகழ்….
என் பாதையை
பெயர்த்து எடு…
நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை
என்
சோற்றில்
நஞ்சு வை
என் எழுத்துக்களில்
காறித்துப்பு
உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.
என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….
Labels: கவி"தை
Saturday, February 7, 2009
மெளனத்தின் அழுத்தம்
Posted by Anonymous at Saturday, February 07, 2009சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.
கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு
சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்
மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை
கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு
இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?
உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.
2009.02.06
shameela_yoosufali@copyright
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Monday, February 2, 2009
தாயே நான் தாகித்திருக்கிறேன்
Posted by Anonymous at Monday, February 02, 2009மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!
தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!
‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….
பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!
நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!
கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!
அன்னையே
அழாதீர்கள்…
இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.
எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!
மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!
இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!
இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!
அன்னையே
அழாதீர்கள்
அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!
சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!
தாயே
நான் தாகித்திருக்கிறேன்
இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!
கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!
அன்னையே
அழாதீர்கள்
பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…
காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்
1998
Labels: கவி"தை, பலஸ்தீனக்கவிதைகள்
Monday, January 26, 2009
நரைக்காத இதயம்
Posted by Anonymous at Monday, January 26, 2009உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
2004 March 24th
copyright@shameela_yoosufali©
Labels: கவி"தை, போர்க்காலக்கவிதைகள்
Sunday, June 29, 2008
முதிர்ந்த இலைகள்!!
Posted by Anonymous at Sunday, June 29, 2008நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!
என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!
தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!
ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!
இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....
ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!
ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!
ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!
திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!
பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!
வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!
Labels: கவி"தை
Thursday, June 12, 2008
என்னை சுவாசிக்க விடுங்கள்!!!
Posted by Anonymous at Thursday, June 12, 2008சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...
உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..
கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...
கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.
நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.
நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
Labels: கவி"தை
Tuesday, June 10, 2008
எல்லாம் முடிந்தது???
Posted by Anonymous at Tuesday, June 10, 2008எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Monday, June 9, 2008
உயிரிலிடறும்.........
Posted by Anonymous at Monday, June 09, 2008பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
Labels: கவி"தை, காதல் சார் கவிதைகள்
Friday, May 30, 2008
சிலுவை
Posted by Anonymous at Friday, May 30, 2008

நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!
என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!
பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...
பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...
ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....
எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!
காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...
முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...
உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....
என்கவிதை
உயிர்தெழுகிறது!!!
copyrights@shameela
Labels: கவி"தை, போர்க்காலக்கவிதைகள்
Tuesday, April 15, 2008
தொடுவானம்
Posted by Anonymous at Tuesday, April 15, 2008புழுதி படர்ந்த...
சோகம் சுமந்த...
வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
தூரத்தில் மங்கலாய்...
ஒவ்வொரு
விழிகளை
இங்கு தான்
நேற்று
இன்று
சோகக் கரு தரித்திருக்கும்
அழாதீர்கள்!!!
வசந்தம் சிலிர்த்த
வரண்ட பாலைவனத்திலும்
இஸ்லாம்
என்காயங்களுக்கு
உடைந்த இதயத்துள்
அழுத விழியோரத்தில்
என்தாய் பூமியே
இதோ
ஏ அமெரிக்கா!!!
உன்
July 2007
Labels: கவி"தை, பலஸ்தீனக்கவிதைகள்
Wednesday, April 2, 2008
யுக முடிவு
Posted by Anonymous at Wednesday, April 02, 2008
லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!
இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !
என்ன செய்வாய் இனி?
உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!
எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!
இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!
உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !
வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !
வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !
ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு
இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !
மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?
1998 may
Labels: கவி"தை
Monday, March 31, 2008
சப்பாத்தின் தேய்வு.....
Posted by Anonymous at Monday, March 31, 2008உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….
சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!
வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!
கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!
போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!
தேய்ந்தாலென்ன?
Labels: கவி"தை
அகதி
Posted by Anonymous at Monday, March 31, 2008சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!
விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!
வாசலுக்கு
வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!
என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!
……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….
எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………
என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
copyrights©shameela_yoosuf_ali
Labels: கவி"தை, போர்க்காலக்கவிதைகள்
Sunday, March 30, 2008
சருகு
Posted by Anonymous at Sunday, March 30, 2008
இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....
விதையாய் சிலிர்க்க
மடியாகி....
தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................
ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...
copyrights©shameela_yoosuf_ali
Labels: கவி"தை
முடிவிலிப்பாதை!
Posted by Anonymous at Sunday, March 30, 2008

துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...
என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!
..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....
எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...
தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!
என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!
துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!
யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!
காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???
என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!
இது
முடிவிலிப்பாதை!!!
கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.
copyrights©shameela_yoosuf_ali
Thursday, June 16, 2011
வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்
Saturday, June 4, 2011
கார்க்கால ஞாபகங்கள்
Monday, June 29, 2009
தோற்றுப்போகிறேன்.....
வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…
முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.
தோற்றுப்போகிறேன்…
ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…
அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…
விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….
உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!
Monday, June 15, 2009
தூங்காத நினைவுகள்!!!
என்ன
`நான்`
என் நேற்றுக்கள்….
Sunday, May 24, 2009
புத்தரின் விழிகள்

எரியுங்கள்!!!
நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!
அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!
துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!
புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!
நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!
கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?
அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?
புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!
Thursday, February 12, 2009
ஓரங்குலமும் அசையேன்
என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!
என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!
என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!
துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!
அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….
என்னை
சின்னாபின்னப்படுத்து….
என் குடும்பத்தை
இகழ்….
என் பாதையை
பெயர்த்து எடு…
நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை
என்
சோற்றில்
நஞ்சு வை
என் எழுத்துக்களில்
காறித்துப்பு
உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.
என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….
Saturday, February 7, 2009
மெளனத்தின் அழுத்தம்
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.
கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு
சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்
மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை
கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு
இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?
உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.
2009.02.06
shameela_yoosufali@copyright
Monday, February 2, 2009
தாயே நான் தாகித்திருக்கிறேன்

மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!
தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!
‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….
பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!
நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!
கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!
அன்னையே
அழாதீர்கள்…
இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.
எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!
மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!
இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!
இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!
அன்னையே
அழாதீர்கள்
அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!
சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!
தாயே
நான் தாகித்திருக்கிறேன்
இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!
கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!
அன்னையே
அழாதீர்கள்
பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…
காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்
1998
Monday, January 26, 2009
நரைக்காத இதயம்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !
இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !
நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !
அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !
ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !
உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !
ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி
தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,
உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.
ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…
இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…
காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…
நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு
‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…
சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…
உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…
கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…
தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…
இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…
புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்
ஓ
அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?
பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?
ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…
விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்
பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்
மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…
அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.
வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்
மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!
இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!
யாஸீனே
எங்கிருக்கிறீர்?
மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???
இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???
பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.
.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
2004 March 24th
copyright@shameela_yoosufali©
Sunday, June 29, 2008
முதிர்ந்த இலைகள்!!

நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!
என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!
தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!
தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!
ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!
இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....
ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!
ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!
ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!
திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!
பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!
வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!
நில்!!
அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!
Thursday, June 12, 2008
என்னை சுவாசிக்க விடுங்கள்!!!

சுவாசிக்க விடுங்கள்!!
துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!
பூமியின்
எந்த
மையமிது?
காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.
என்னை
விட்டு விடுங்கள்....
அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...
உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..
கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...
கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.
நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.
நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
சுவாசிக்க விடுங்கள்!!
copyrights@shameela-yoosufali
Tuesday, June 10, 2008
எல்லாம் முடிந்தது???

எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...
கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...
மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..
என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...
ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....
உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....
எப்படி
அழிக்கப்போகிறாய்?
Monday, June 9, 2008
உயிரிலிடறும்.........
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
Friday, May 30, 2008
சிலுவை

நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!
என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!
பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...
பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...
ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....
எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!
காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...
முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...
உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....
என்கவிதை
உயிர்தெழுகிறது!!!
copyrights@shameela
Tuesday, April 15, 2008
தொடுவானம்

புழுதி படர்ந்த...
சோகம் சுமந்த...
வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
தூரத்தில் மங்கலாய்...
ஒவ்வொரு
விழிகளை
இங்கு தான்
நேற்று
இன்று
சோகக் கரு தரித்திருக்கும்
அழாதீர்கள்!!!
வசந்தம் சிலிர்த்த
வரண்ட பாலைவனத்திலும்
இஸ்லாம்
என்காயங்களுக்கு
உடைந்த இதயத்துள்
அழுத விழியோரத்தில்
என்தாய் பூமியே
இதோ
ஏ அமெரிக்கா!!!
உன்
July 2007
Wednesday, April 2, 2008
யுக முடிவு
லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!
இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !
என்ன செய்வாய் இனி?
உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!
எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!
இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!
உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !
வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !
வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !
ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு
இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !
மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?
1998 may
Monday, March 31, 2008
சப்பாத்தின் தேய்வு.....
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….
சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!
வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!
கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!
போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!
தேய்ந்தாலென்ன?
அகதி

பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!
விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!
வாசலுக்கு
வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!
என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!
நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!
……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….
எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………
என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
copyrights©shameela_yoosuf_ali
Sunday, March 30, 2008
சருகு
இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....
விதையாய் சிலிர்க்க
மடியாகி....
தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................
ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...
copyrights©shameela_yoosuf_ali
முடிவிலிப்பாதை!


துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...
என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!
..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....
எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...
தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!
என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!
துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!
யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!
காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???
என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!
இது
முடிவிலிப்பாதை!!!
கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.
copyrights©shameela_yoosuf_ali