Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

0 comments:

Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

No comments: