Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, July 30, 2011

சாத்திய யன்னல்கள்

ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை

வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்

உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.
...
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான்


அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்

அறுதியான வாதம்.


ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென

தூங்குவதாயொரு பாவனை.

நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்

எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…

நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்

துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா

யன்னல்களையும்.

அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்

வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.

அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு

விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர…

copyrights@shameela_yoosufali

31.07.2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

Wednesday, July 27, 2011

இரண்டாவது இரவு


தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்

அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்

அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்



அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

27.07.2011

Monday, June 13, 2011

வாழ்தலை மறந்த கதை


அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

2011.06.14

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, July 30, 2011

சாத்திய யன்னல்கள்

ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை

வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்

உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.
...
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான்


அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்

அறுதியான வாதம்.


ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென

தூங்குவதாயொரு பாவனை.

நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்

எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…

நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்

துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா

யன்னல்களையும்.

அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்

வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.

அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு

விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர…

copyrights@shameela_yoosufali

31.07.2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

Wednesday, July 27, 2011

இரண்டாவது இரவு


தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்

அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்

அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்



அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

27.07.2011

Monday, June 13, 2011

வாழ்தலை மறந்த கதை


அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

2011.06.14

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.