Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

1 comments:

pink21 said...

Masha allah really nice.
my wishes to you :))

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

1 comment:

pink21 said...

Masha allah really nice.
my wishes to you :))

Template by:
Free Blog Templates