Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998