Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

0 comments:

Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

No comments: