Thursday, September 4, 2008

இனிய ரமழானே வருக!!!

இதயத்தின் துரு அகற்றி...
அழுக்குத் தோய்ந்த உள்ளங்களை சலவை செய்யவும்...
கல்லாய் காய்ந்து போன இதய சஹாராவில் நீர்ச்சுனை கசியவுமாய்...
மீண்டுமொரு ரமழான் நம் வீட்டுக் கதவு தட்டுகிறது!!!

இனிய ரமழானை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்

Sunday, June 29, 2008

முதிர்ந்த இலைகள்!!



நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!



என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!



தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!



தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!



ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!



இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....



ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!



ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!



ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!



திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!



பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!



வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!


நில்!!


அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

Tuesday, June 10, 2008

எல்லாம் முடிந்தது???



"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...


கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...


மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..


என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...

ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....

உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....

எப்படி
அழிக்கப்போகிறாய்?

Monday, June 9, 2008

உயிரிலிடறும்.........

நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

Tuesday, March 18, 2008

ஒரு புயலும் சில பூக்களும்



உண‌ர்வின் வேர்க‌ள்
தாகிக்கும்
இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில்

என்
மெள‌ன‌ விசும்ப‌ல்!
புத்தகங்களுக்குள்
வசிக்கும்விழிகளில்...
யுகங்கள் அழுத
வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என்
இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...

துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல்
பிறக்கட்டும்!

சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்

நிரந்தரமாய்....
தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!

தளைகள் அறுந்த‌
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...

நினைக்கும் போது
மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!

நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும்
போதும்
என் உயிர் பூக்க‌...

ஒவ்வொரு
மொட்டின் ம‌ல‌ர்விலும்
ஒவ்வொரு இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!

வற்றாத‌ நீர்ச்சுனைக‌ளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்க‌ளில்...
தாக‌ம்!தாக‌ம்!

இடையில் இட‌றும்
சில‌`க‌ற்க‌ள்`
`நீ வெறும் வேர் தான்`உறுத்தும்!
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புய‌லும்
சில‌ பூக்க‌ளும் சொந்த‌‌ம்!
வளைந்தோடும் நதிக்கு...
க‌ரையோர‌ நாண‌ல்க‌ளின்
கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்க‌ நேர‌மேது?


இது முடிவிலிப் பாதை!!!

Copyrights©shameela_yoosuf_ali

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali

Thursday, February 28, 2008

உயிரில் பூத்த தோழமை!!!



ஒரு காத்திருப்பின்இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!

மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்...

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்....
இயற்கைசந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்வேதனையை...
ஒரு
வேதனையின்சந்தோஷத்தை....
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்...
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்....
என்னை நீயுமாய்
பகிரும்பொழுதுகளில்
பசியில்லை.....
தாகமில்லை......
மனவெளியில் மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்தேவையில்லை
இதயம் போதுமே!!!

copyrights©shameela_yoosuf_ali


Thursday, September 4, 2008

இனிய ரமழானே வருக!!!

இதயத்தின் துரு அகற்றி...
அழுக்குத் தோய்ந்த உள்ளங்களை சலவை செய்யவும்...
கல்லாய் காய்ந்து போன இதய சஹாராவில் நீர்ச்சுனை கசியவுமாய்...
மீண்டுமொரு ரமழான் நம் வீட்டுக் கதவு தட்டுகிறது!!!

இனிய ரமழானை இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்

Sunday, June 29, 2008

முதிர்ந்த இலைகள்!!



நிலா காயும்
முன்னிரவில்....
முறிந்த படலையில்
ஏகாந்தமாய் தேம்பும்
என் இதயம்!!!



என்ஆன்மாவுக்குள்
பீறிட்டசின்ன நீரூற்றின்
பிரவாகம்....
கரை உடைக்கிறது!!!



தாகம்!தாகம்!
முளையாய்அரும்ப
முன்னரே
வலிக்க வலிக்க
விழுது பாய்ச்சிய
வேகமிது!!!



தூரத்தில் அசையும்
நதி மேகங்களில்...
என் கனவுகள்!!!



ஒளிர்ந்து
இதயம் நனைக்கும்
விடி வெள்ளியில்
என் இலட்சியம்!!!



இருளின் மடியிலும்
நிலவின் பிடியிலும்
நிற்காமல்
ஓடும்வாழ்க்கை....
ஒற்றையடிப்பாதையாய்.....



ஒழுங்கையோ
ஒற்றையடி!
முள்பட்டே
கிழிந்தபாதங்கள்!



ரணங்களின் அந்தரங்கத்தில்
அடிக்கடி
தற்கொலை செய்யும்
இதயம்!



ஆண் அல்ல என்பதனால்
அறைந்து சாத்தப்பட்ட
கதவுகள்!!!



திறமை வெள்ளத்தின்
வீச்சைமூச்சடக்கி......
துளித்துளியாய்...
தேவைகளில் பெய்!!



பிரார்த்தனை
விழிகளின்ஈரத்தில்...
அழுத கண்ணீர்
விம்மும் நடு இரவில்....
ஒருதாய்ச்சிறகின்
கதகதப்பாய்....
என் தொழுகை!!!!



வானம்
தொட்டு விடத்துடிக்கும்
உள்ளமே!!


நில்!!


அழுத்தும்
சுமைகள்
சிறகுகளைக் காயப்படுத்தும்!!!

Thursday, June 12, 2008

என்னை சுவாசிக்க விடுங்கள்!!!


என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

துளித்துளியாய்
பொழியும்
மழையே
என்னைக்கட்டிக் கொள்!

பூமியின்
எந்த
மையமிது?

காலுக்கு
செருப்பு போலவே
மழைக்கு
குடையும்
சுமைதான்.


என்னை
விட்டு விடுங்கள்....


அந்தி வானத்தின்
அசையாத செம்மஞ்சளாய்...

உயிரைக் கோதும்
புல்லாங்குழலிடுக்காய்..

கன்னக் கதுப்பின்
வெட்கச்சிவப்பாய்...

கடைசிவரை
நான்
இருந்து விடுகிறேன்.


நதியின் துடிப்பு...
கரைக்குச் சொந்தமில்லை.


நிலவின் ஒளிர்வு...
வானுக்கு
சொந்தமில்லை.
என்னை
சுவாசிக்க விடுங்கள்!!

copyrights@shameela-yoosufali

Tuesday, June 10, 2008

எல்லாம் முடிந்தது???



"எல்லாம் முடிந்தது"
எத்தனை இலகுவாய்
சொல்லிப் போகிறாய்...


கால் இடறி
ஊறும்
குருதியாய் நினைவுகள்!
மனசின் இடுக்கெல்லாம்
விழி நீர்
பிசுபிசுப்பு...


மொத்தமாய்
தந்ததையெல்லாம்
திருப்பினாய்...
அழித்தாய்
உடைத்தாய்...
துடைத்தெறிந்தாய்..


என்னை
ஞாபகிக்கும்
உன்
முள் முளைத்த
முகத்தை...

ஏகாந்தம் உடைத்தெறியும்
என்
சிரிப்புச் சிணுங்கல்களை....

உன்னை
மறுதலித்து
என்னை நோக்கி
மீண்டோடிவரும்
உன் காதலை.....

எப்படி
அழிக்கப்போகிறாய்?

Monday, June 9, 2008

உயிரிலிடறும்.........

நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!

உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...

மீண்டும் மீண்டும்
இன்னும்வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...

என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....

காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள்நடுங்கியழும்
என் மனசு பாரடா...

நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...

ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........

இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....

Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

Tuesday, March 18, 2008

ஒரு புயலும் சில பூக்களும்



உண‌ர்வின் வேர்க‌ள்
தாகிக்கும்
இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில்

என்
மெள‌ன‌ விசும்ப‌ல்!
புத்தகங்களுக்குள்
வசிக்கும்விழிகளில்...
யுகங்கள் அழுத
வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என்
இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...

துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல்
பிறக்கட்டும்!

சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்

நிரந்தரமாய்....
தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!

தளைகள் அறுந்த‌
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...

நினைக்கும் போது
மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!

நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும்
போதும்
என் உயிர் பூக்க‌...

ஒவ்வொரு
மொட்டின் ம‌ல‌ர்விலும்
ஒவ்வொரு இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!

வற்றாத‌ நீர்ச்சுனைக‌ளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்க‌ளில்...
தாக‌ம்!தாக‌ம்!

இடையில் இட‌றும்
சில‌`க‌ற்க‌ள்`
`நீ வெறும் வேர் தான்`உறுத்தும்!
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புய‌லும்
சில‌ பூக்க‌ளும் சொந்த‌‌ம்!
வளைந்தோடும் நதிக்கு...
க‌ரையோர‌ நாண‌ல்க‌ளின்
கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்க‌ நேர‌மேது?


இது முடிவிலிப் பாதை!!!

Copyrights©shameela_yoosuf_ali

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali

Thursday, February 28, 2008

உயிரில் பூத்த தோழமை!!!



ஒரு காத்திருப்பின்இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!

மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்...

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்....
இயற்கைசந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்வேதனையை...
ஒரு
வேதனையின்சந்தோஷத்தை....
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்...
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்....
என்னை நீயுமாய்
பகிரும்பொழுதுகளில்
பசியில்லை.....
தாகமில்லை......
மனவெளியில் மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்தேவையில்லை
இதயம் போதுமே!!!

copyrights©shameela_yoosuf_ali