Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

Tuesday, March 18, 2008

ஒரு புயலும் சில பூக்களும்



உண‌ர்வின் வேர்க‌ள்
தாகிக்கும்
இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில்

என்
மெள‌ன‌ விசும்ப‌ல்!
புத்தகங்களுக்குள்
வசிக்கும்விழிகளில்...
யுகங்கள் அழுத
வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என்
இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...

துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல்
பிறக்கட்டும்!

சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்

நிரந்தரமாய்....
தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!

தளைகள் அறுந்த‌
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...

நினைக்கும் போது
மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!

நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும்
போதும்
என் உயிர் பூக்க‌...

ஒவ்வொரு
மொட்டின் ம‌ல‌ர்விலும்
ஒவ்வொரு இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!

வற்றாத‌ நீர்ச்சுனைக‌ளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்க‌ளில்...
தாக‌ம்!தாக‌ம்!

இடையில் இட‌றும்
சில‌`க‌ற்க‌ள்`
`நீ வெறும் வேர் தான்`உறுத்தும்!
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புய‌லும்
சில‌ பூக்க‌ளும் சொந்த‌‌ம்!
வளைந்தோடும் நதிக்கு...
க‌ரையோர‌ நாண‌ல்க‌ளின்
கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்க‌ நேர‌மேது?


இது முடிவிலிப் பாதை!!!

Copyrights©shameela_yoosuf_ali

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

Tuesday, March 18, 2008

ஒரு புயலும் சில பூக்களும்



உண‌ர்வின் வேர்க‌ள்
தாகிக்கும்
இர‌வுக்க‌ர்ப்ப‌த்தில்

என்
மெள‌ன‌ விசும்ப‌ல்!
புத்தகங்களுக்குள்
வசிக்கும்விழிகளில்...
யுகங்கள் அழுத
வலி!

தொண்டைக்குள்
தூண்டில் முள்ளாய்
என்
இதயம்!

பொங்கிப்பிரவகிக்கும்
என்
ஞான சமுத்திரம்
தாளில் இறங்குகிறது...

துளித்துளியாய்...

ஒவ்வொரு வரியும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல்
பிறக்கட்டும்!

சில கனவுகளும்
வானுயர்ந்த இலட்சியங்களும்
நினைவுகளில் மட்டும்

நிரந்தரமாய்....
தயவு செய்து
என்னை
சுவாசிக்க விடுங்கள்!

தளைகள் அறுந்த‌
கரங்கள் வேண்டும்
அணு அணுவாய்
என்
இதயம் பெயர்க்க...

நினைக்கும் போது
மட்டும்
சாப்பிடும்
சுதந்திரம் வேண்டும்!

நீளும் இரவும்
நானும்
ஒரு தொழுகைப் பாயும்
சில விழி நீர்த்துளிகளும்
போதும்
என் உயிர் பூக்க‌...

ஒவ்வொரு
மொட்டின் ம‌ல‌ர்விலும்
ஒவ்வொரு இலையின் உதிர்விலும்
தேடல்!தேடல்!

வற்றாத‌ நீர்ச்சுனைக‌ளை
உறிஞ்சிக் கொண்டே
ஓடிக் கொண்டிருக்கும்
என் வேர்க‌ளில்...
தாக‌ம்!தாக‌ம்!

இடையில் இட‌றும்
சில‌`க‌ற்க‌ள்`
`நீ வெறும் வேர் தான்`உறுத்தும்!
ஓடிக்கொண்டிருக்கும்
வேருக்கு
ஒரு புய‌லும்
சில‌ பூக்க‌ளும் சொந்த‌‌ம்!
வளைந்தோடும் நதிக்கு...
க‌ரையோர‌ நாண‌ல்க‌ளின்
கேள்விக‌ளுக்கு
ப‌தில‌ளிக்க‌ நேர‌மேது?


இது முடிவிலிப் பாதை!!!

Copyrights©shameela_yoosuf_ali

எப்படி முடிந்தது?



நீ
மிச்சம் வைத்த
எச்சில் தேநீர்.....

நாம்
ஒன்றாய் வாங்கிய
இரட்டைக் கட்டில்....

இனியவனே!
கடைசி கடைசியாய்
நீ உதிர்த்தமுத்தம்....

ஊசி ஊசியாய்
உறை பனிபெய்யும்
மார்கழி இரவுகள்....

உனக்காய்...
தாகிக்கும்
என்இதயம்....

இத்தனையும்
மறக்க
உன்னால்
எப்படி முடிந்தது?


copyrights©shameela_yoosuf_ali