Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

0 comments:

Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

No comments: