Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


0 comments:

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


No comments:

Template by:
Free Blog Templates