தோற்றுப்போகிறேன்.....
Monday, June 29, 2009
வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…
முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.
தோற்றுப்போகிறேன்…
ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…
அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…
விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….
உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

June 29, 2009 4:45 AM
தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
June 30, 2009 3:31 AM
the wordings of your poem is very keen. it represents my life also. i could feel the warmth of love
July 14, 2009 8:00 PM
நன்றி தமிழ்குறிஞ்சி
நம் வாழ்க்கை இன்னொரு வாழ்க்கையின் கண்ணாடி தான் சகோதரர் செல்வா..நன்றிகள்