Wednesday, June 8, 2011

காணாமல் போன அம்மிக்கல்

பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்

நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.

அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.

அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்

அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்

கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.

முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

0 comments:

Wednesday, June 8, 2011

காணாமல் போன அம்மிக்கல்

பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்

நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.

அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.

அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்

அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்

கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.

முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

No comments: