Sunday, June 12, 2011

கவிஞனின் மனைவி



அபூர்வமான சொற்களைப் பின்னும்
பொன்னிற சிலந்தி அவன்

ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான்.

திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்
பார்த்தவாறே உறங்கிப்போவாள்.

அவன் எழுதும் எதையும்
அவள் வாசித்ததில்லை
அவனது விசாரங்களும் தனித்துவமான
சிந்தனைகளும்
அவளுக்குப் புரிந்ததேயில்லை.
அதிகம் பேசுவது அவனை
ஆத்திரமூட்டும்.
அவள் மொழி மறந்தவள் ஆயினள்.

கிராமத்துக்கிளி மொழிகள்
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்
அடங்கியிருந்தாள்.

சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து rusted
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது.

புழுங்கிய சமையலறையில்
நெடுங்காலமாய் திறவாதிருந்த
‘ஜன்னல்’ தான் அது

அதனூடே அவள்
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்
வானவில் எழுதும் ஓவியங்களையும்
வாசிக்கத் தொடங்கினாள்.

Wednesday, June 8, 2011

காணாமல் போன அம்மிக்கல்

பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்

நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.

அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.

அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்

அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்

கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.

முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

Saturday, June 4, 2011

ஒற்றைத் திறப்பு


ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு
விரிவுரைக்கு செவி விற்ற
முழுநாட் களைப்பு

கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம்
அரை மணி இடைவெளி..
மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்

வீடு வாடகையானாலும் நம் வீடாயிற்றே
கொஞ்சம் ஓய்வெடுக்க…
குளிக்க…..
ஈரத்தலை சுற்றிய துண்டுடன் ‘காட்டில் ஒரு மான்” வாசிக்க
சின்னச்சின்னதாய் இடியப்பம் இடித்த சம்பல் சாப்பிட
செளகரியமாய் உடை மாற்ற
வீடு தான் தோது.

அலுங்கிக் கசங்கிய உடையாய்
தேநீர் கோப்பைப் பின்னணியில்
மிருதுவான உரையாடல் கனவோடு
வலிக்கால்கள்
வீடு வரை கொண்டு சேர்த்தன.

வாசல் வந்த பின் …
திறப்பு???
ஆயிரம் மைல் தொலைவில்
அலிபாபாக் குகையி்ல்
பத்திரமாய் கிடந்தது.

அரக்கப் பறக்க
அலுவலக நண்பருக்கு அழைப்பு
அடுத்த பஸ்ஸில் அனுப்பி வைப்பதாய்
ஒரு மணி நேரம் இரண்டாக
ஓரிடத்தில் முளைத்துக் கிடந்தோம்.

தாமதமாய் மேல் வீட்டு ஞாபகம்
உதிக்க
எப்போதும் திறக்காத கதவொன்றால்
ஒட்டடை அலங்காரத்தோடு
உட் பிரவேசம்

அப்போது பார்த்து,
நாற்சக்கர வண்டி, திறப்புடன்
நம்மூர் தாண்ட
இரு சக்கர வண்டி
இப்போது இப்போது என
இரு மணித்தூரம் கடக்க
விலைமதிப்பில்லா திறப்பு
மீண்டும் சாவித்துவாரம்
கண்டது,
அப்பாடா?

இன்னொரு திறப்பு வெட்டல்
நாளைக்கு நாம் செய்யும் முதல் வேலை


மாதங்களும் தொலைந்தழிந்தேகின,
திறப்பு இன்னும்
ஒற்றையாகவே இருக்கிறது.

கார்க்கால ஞாபகங்கள்





மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்


எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…


இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.


வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான  இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

Monday, July 6, 2009

உயிரில் பூத்த தோழமை

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……

மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

Sunday, June 12, 2011

கவிஞனின் மனைவி



அபூர்வமான சொற்களைப் பின்னும்
பொன்னிற சிலந்தி அவன்

ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான்.

திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்
பார்த்தவாறே உறங்கிப்போவாள்.

அவன் எழுதும் எதையும்
அவள் வாசித்ததில்லை
அவனது விசாரங்களும் தனித்துவமான
சிந்தனைகளும்
அவளுக்குப் புரிந்ததேயில்லை.
அதிகம் பேசுவது அவனை
ஆத்திரமூட்டும்.
அவள் மொழி மறந்தவள் ஆயினள்.

கிராமத்துக்கிளி மொழிகள்
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்
அடங்கியிருந்தாள்.

சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து rusted
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது.

புழுங்கிய சமையலறையில்
நெடுங்காலமாய் திறவாதிருந்த
‘ஜன்னல்’ தான் அது

அதனூடே அவள்
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்
வானவில் எழுதும் ஓவியங்களையும்
வாசிக்கத் தொடங்கினாள்.

Wednesday, June 8, 2011

காணாமல் போன அம்மிக்கல்

பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்

நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.

அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.

அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்

அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்

கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.

முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

Saturday, June 4, 2011

ஒற்றைத் திறப்பு


ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு
விரிவுரைக்கு செவி விற்ற
முழுநாட் களைப்பு

கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம்
அரை மணி இடைவெளி..
மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்

வீடு வாடகையானாலும் நம் வீடாயிற்றே
கொஞ்சம் ஓய்வெடுக்க…
குளிக்க…..
ஈரத்தலை சுற்றிய துண்டுடன் ‘காட்டில் ஒரு மான்” வாசிக்க
சின்னச்சின்னதாய் இடியப்பம் இடித்த சம்பல் சாப்பிட
செளகரியமாய் உடை மாற்ற
வீடு தான் தோது.

அலுங்கிக் கசங்கிய உடையாய்
தேநீர் கோப்பைப் பின்னணியில்
மிருதுவான உரையாடல் கனவோடு
வலிக்கால்கள்
வீடு வரை கொண்டு சேர்த்தன.

வாசல் வந்த பின் …
திறப்பு???
ஆயிரம் மைல் தொலைவில்
அலிபாபாக் குகையி்ல்
பத்திரமாய் கிடந்தது.

அரக்கப் பறக்க
அலுவலக நண்பருக்கு அழைப்பு
அடுத்த பஸ்ஸில் அனுப்பி வைப்பதாய்
ஒரு மணி நேரம் இரண்டாக
ஓரிடத்தில் முளைத்துக் கிடந்தோம்.

தாமதமாய் மேல் வீட்டு ஞாபகம்
உதிக்க
எப்போதும் திறக்காத கதவொன்றால்
ஒட்டடை அலங்காரத்தோடு
உட் பிரவேசம்

அப்போது பார்த்து,
நாற்சக்கர வண்டி, திறப்புடன்
நம்மூர் தாண்ட
இரு சக்கர வண்டி
இப்போது இப்போது என
இரு மணித்தூரம் கடக்க
விலைமதிப்பில்லா திறப்பு
மீண்டும் சாவித்துவாரம்
கண்டது,
அப்பாடா?

இன்னொரு திறப்பு வெட்டல்
நாளைக்கு நாம் செய்யும் முதல் வேலை


மாதங்களும் தொலைந்தழிந்தேகின,
திறப்பு இன்னும்
ஒற்றையாகவே இருக்கிறது.

கார்க்கால ஞாபகங்கள்





மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்


எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…


இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.


வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான  இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

Monday, July 6, 2009

உயிரில் பூத்த தோழமை

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……

மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!